Posts

Showing posts from July, 2015

இவரைப் போலவும் இருக்க முடியுமா?

Image
தினமும் காலை ஒன்பதரை மணியளவில் அவசர அவரசமாக பேருந்தில் ஏறி அலுவலகம் செல்வது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பு எப்போதும் போல அதே அவசரத்தில் பேருந்தில் ஏறினேன். நமக்குள் எவ்வளவு பதட்டம் இருந்தாலும் , அதனால் பேருந்தின் வேகம் அதிகம் ஆகப்போவதில்லை என்பது மூளைக்கு தெரிந்தாலும் மனதுக்கு புரியாதே. பதட்டம் குறையவே இல்லை. இன்னிக்கும் லேட் தான் என்ற டென்ஷனோடு  காலியான இருக்கை இருக்கிறதா என்று கண்கள் தேடின. பெண்கள் இருக்கை ஒன்று காலியானதை கண்டதும் பால் கிண்ணத்தை கண்ட பூனையைப் போல கூட்ட நெரிசலில் அடித்து பிடித்து போய் அமர்ந்தேன். "ஹப்பாடா.. அடுத்த அரை மணி நேரத்திற்கு காலையில் மிஸ் பண்ண தூக்கத்தை catch up பண்ணிக்கலாம்" என்ற நிம்மதி. ஆனால் அது நடக்கவில்லை. அதை விட விலைமதிப்பற்ற அனுபவம் கிடைத்தது. அதற்கு காரணமாக இருந்த அந்த பெண்மணியை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.  எனது இருக்கையின் அருகே நின்றுக்கொண்டிருந்தார் அந்த பெண். அவரது பெயரை கடைசி வரை நான் கேட்கவே இல்லை.  அவருக்கு சுமார் 55 வயது இருக்கும். ஒரு சாதாரணமான கிராமத்து பெண்மணி. அவரது பேச்சில் நான் கண்ட தெளிவு வேறு எங்குமே கண்டதில்

நூறுநாள்மகிழ்ச்சி நாள் - 9

#நூறுநாள்மகிழ்ச்சி நாள் - 9  நேற்றைய (நாள் - 8) மகிழ்ச்சி அலையைப்  பற்றி விரிவான ஒரு பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது . அதற்கு முன் நாள்-9 அன்று எதில் மகிழ்ச்சி கிடைத்தது என்று பதிய முற்படுகிறேன். இன்று முழுவதும் அம்மா வீட்டில் டென்ட் அடிச்சாச்சு. ஹையா ஜாலி, அம்மா சாப்பாடு அப்படின்னு தம்பட்டம் அடிச்சா, உடனே  வெஜிடரியன் ல என்ன பெரிய ஸ்பெஷல் இருக்கு? அப்படின்னு கேள்வி வருது. ஆனா இருக்கே. அதுவும் அம்மா கையால சமைச்சதுன்னா வேற  level taste இல்லையா? முருங்கைக்காய், சின்ன வெங்காயம் வத்தக்கொழம்பு, சேப்பங்கிழங்கு பொரியல், புடலங்காய் பொரியல், ரசம், கீரை மசியல் என்று வழக்கம் போல அசத்திட்டாங்க. அதோடு சேர்ந்து "இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ. உப்பு சரியாய் இருக்கா? ரொம்ப காரம் இல்லையே? புடிச்சிருக்கு இல்ல?" என்று சாப்பிட்டு முடிப்பதற்குள் கிடைக்கும் அன்பிற்கு தனி சுவை. அவர் செய்வதை எல்லாம் பார்க்கும்போது என் மகளை  நானும் இப்படியெல்லாம் பார்த்து பார்த்து கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஒரு விதத்தில் டீனேஜ் வயதில் அம்மாவை பல வகையில் வெறுத்து, எரிந்து விழுந்து, காயப்படுத்தி இருந்தா

‪#‎நூறுநாள்மகிழ்ச்சி‬ தருணங்கள் நாள்-7

‪#‎ நூறுநாள்மகிழ்ச்சி‬  தருணங்கள் நாள்-7: இன்று காலையில் முகநூலை திறந்து பார்த்தவுடன் நான் படித்த முதல் மெஸேஜ் என் பள்ளித்தோழியிடமிருந்து வந்திருந்தது. பார்த்தும் பேசியும் பல வருடங்கள் ஆகியிருந்த தோழிகளிடமிருந்து திடீரென மெஸேஜஸ் வரும்பொழுது ஒரு அலாதியான சந்தோஷம் தோன்றும் அல்லவா? அப்படி இருந்தது இன்று காலையில். அவளுக்கு இந்த நூறுநாள் மகிழ்ச்சி பயிற்சி பிடித்திருப்பதாகவும், அவளும் இதை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் எழுதி இருந்தாள்.  ‪#‎ மகிழ்ச்சி‬ அவளது message-ஐ படிக்கும்பொ ழுது எங்களது பள்ளி நாட்களின் இனிமையான நினைவுகள் மனதை வருடிச் சென்றன. அத்தனையும் கடந்து இப்பொழுது வாழ்க்கையில் எங்கு இருக்கிறோம் என்று நினைத்துப் பார்ப்பது வேறொரு தனி அனுபவம் தான். இந்த மகிழ்ச்சி அலை ஓயாமல் பாய்ந்து பல இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆவலுடன் நாளையும் தொடர்வோம், வேறொரு அனுபவத்தை நோக்கி!

‪#‎நூறுநாள்மகிழ்ச்சி‬ நாள் 6

Image
‪#‎ நூறுநாள்மகிழ்ச்சி‬  நாள் 6: எனது உயிர் தோழி  Ganga Bharani  எழுதி வெளியாகி உள்ள இரண்டு புத்தகங்களையும் ஆர்டர் செய்திருந்தேன். இன்று வந்து சேர்ந்தன. எனக்கு வாழ்க்கையில் தெளிவும்,நம்பிக்கையும் ஏராளமாக தேவைப்பட்ட போது எனக்கு தோள் கொடுத்த தோழி.  என்னை blog எழுதச்சொல்லி ஊக்கப்படுத்திய தோழியும் இவளே. இந்த தோழியின் எழுத்து முயற்சிக்கு எப்போதும் துணை நின்று ஊக்கம் அளிக்க ஆசை. அவளது கனவுகளை புத்தகங்களாகவும்,பாராட்டுகளாகவும் காணும்போது மிக்க  ‪#‎ மகிழ்ச்சி‬ . ‪#‎ வாழ்க்கையின்அர்த்தங்கள்‬   ‪#‎ உண்மையானநட்பு‬   ‪#‎ AMinuteToDeath‬

நூறுநாள்மகிழ்ச்சி நாள் - 5

என்ன டா இன்னிக்கு மகிழ்ச்சி பதிவு எதுவும் வரலையே னு யோசிச்சிக்கிட்டு இருந்தீங்களா? இதோ, கொஞ்சம் லேட் ஆயிடுச்சு! நூறுநாள்மகிழ்ச்சி நாள் - 5: இன்று மகிழ்ச்சியை உருவாக்க நானாக மெனக்கெடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்பொழுது இன்று நான் மகிழ்ச்சியாக இல்லயா? என்று யோசித்து பார்த்த போது  என்னுள் நான் காணும் மாற்றங்களை உணர்ந்தேன். இந்த மகிழ்ச்சி பயிற்சியை  தொடங்கிய இந்த சில நாட்களிலேயே என்னுள் பொறுமையும் புரிதலும்  அதிகரித்திருப்பதை உணர்கிறேன். சாதாரணமாக சிறிய விஷயங்களுக்கெல்லாம் முகத்தை சுழிக்கும் சுபாவம் என்னிடம் அதிகம். ஆனால் கடந்த சில நாட்களாக அதை தவிர்க்க முயல்கிறேன். இதன் மூலம் நானும் என்னை சுற்றி இருப்பவர்களும் கூட மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிகிறது. இதனால் ஒரு விதமான மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது.  இந்த பயிற்சியின் பலன் உள்ளே ஊற ஆரம்பித்திருப்பதாக தோன்றுகிறது. உங்களுக்கும் இது நடக்கிறதா என்று முயன்று பாருங்களேன். இன்றைய பதிவு விரைவில்.

நூறு நாள் மகிழ்ச்சி சவால் நாள்:3 (July 24,2015)

Image
‪#‎ நூறுநாள்மகிழ்ச்சி‬  நாள்:3 நம் வாழ்க்கைக்கு இன்றியமையாத வரமாக இருக்கும் ஒரு தொழிலாளிக்கு இன்று நன்றி சொல்லி மகிழலாம் என்று முடிவெடுத்தேன். நான் சமீப காலமாக அடிக்கடி பயன்படுத்துவது ஆட்டோ சேவையை தான். இன்று ஒரு ஆட்டோ ஓட்டுனருக்கு நன்றி சொன்னால் என்ன? வீட்டில் எப்பொழுதோ வாங்கி வைத்திருந்த கிரீட்டிங் கார்ட் (greeting card) ஒன்றை எடுத்து (புகைப்படத்தில் காணலாம்) ஒரு வாழ்த்து செய்தியை எழுதினேன். அது வெறும் நன்றியாக மட்டுமில்லாமல் அவரை ஊக்குவிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்ப தால் இந்த வரிகளை எழுதினேன். ஓலா ஆட்டோவில் திரு.மொஹம்மது அலீ-யின் (55-60 வயது) ஆட்டோவில் பயணம் தொடங்கியது. பயணத்தின் போது அவரிடம் பல விஷயங்கள் casual-ஆக பேசிக்கொண்டே வந்தேன். இறங்கும்பொழுது இந்த வாழ்த்து அட்டையை அவரிடம் கொடுத்து, கொடுப்பதற்கான காரணத்தையும் சொன்னேன். சென்னை மக்களிடம் அவர் ஒரு வேண்டுகோள் விடுத்தார்: "எங்கள நம்பி ஆட்டோ-ல நெறய பேர் ஏறுறாங்க. எங்களுக்கு வழி தெரியும்னு சொல்லியும் சிலர் எங்கள நம்பாம, வழி முழுக்க மத்தவங்க கிட்ட வழி கேட்டுக்கிட்டே வறாங்க. அது சில நேரத்துல வருத்தமா இருக்கு.

நூறு நாள் மகிழ்ச்சி சவால் நாள்:2 (July 23,2015)

‪#‎ நூறுநாள்மகிழ்ச்சி‬  சவால் நாள்-2 நேற்று நீங்கள் பலரும் அளித்த ஊக்குவிப்பின் எதிரொலியாக இன்றும் தொடர்கிறேன். காலையில் ஒரு சிந்தனை. இந்த சவாலின் மூலம் நான் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதுமா? இன்று வேறு ஒருவர் முகத்திலும் புன்னகையை மலர செய்வோம் என்ற எண்ணத்துடன் கையில் சில ரோஜாப்பூக்களை எடுத்து கொண்டு புறப்பட்டேன்.  எங்கள் last minute மளிகை பொருள் தேவைகளுக்கு நாங்கள் எப்போதும் நாடுவது தெருமுனையில் உள்ள அண்ணாச்சி கடை. அண்ணாச்சியின் மனைவி கடையை கவனித்துக் கொண்டு எப்போதும் அங்க ேயே இருப்பவர். அவரிடம் சென்று, "நீங்க ரோஜாப்பூ வெச்சுப்பீங்களா அக்கா? என் கிட்ட இருக்கற ரோஜாப்பூவ யாருக்காவது குடுக்கணும்-னு தோணிச்சு. சரி, உங்களோட தினசரி உழைப்ப பாராட்டி உங்களுக்கு குடுக்கலாம் னு எடுத்துட்டு வந்தேன்." அவங்களும் சிரிச்சுகிட்டே வாங்கிக்கிட்டாங்க. மகிழ்ச்சியாக இருந்தது.  smile emoticon   இன்று நீங்கள் யாரை மகிழ்வித்து மகிழ போகிறீர்கள்? ‪ #‎ வாழ்க்கையின்பயன்என்ன‬ இப்படிக்கு உங்கள் ஹரி

நூறு நாள் மகிழ்ச்சி சவால் நாள்:1 (July 22,2015)

Image
சமீபத்தில் எனக்கு அறிமுகமான நண்பர் ஒருவரின் முகநூல் பக்கத்தில் இந்த வரிகளை கண்டேன் - "மகிழ்ச்சியான அப்பா நான்". இந்த வரிகள் என்னுள் சிந்தனை அலைகளை தூண்டிவிட்டன. "மகிழ்ச்சியான பெண்மணி நான்" என்று என்னால் உறுதியாக ஒவ்வொரு நாளும் சொல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்தது. சரி, அந்த மகிழ்ச்சியை நாமே ஒவ்வொரு நாளும் உருவாக்கி கொண்டால் என்ன என்றும் தோன்றியது. எனவே ‪#‎ நூறுநாள்மகிழ்ச்சி‬  என்ற சவாலை எனக்கு நானே விடுத்துள்ளேன். செய்ய முடிகிறதா என்று பார்ப்போம்! நீங்களும்  என்னோடு சவாலை ஏற்றுக்கொண்டு பயணிக்கலாம். என்ன செய்ய வேண்டும்? தினமும் ஏதாவது ஒரு மகிழ்ச்சி தரும் விஷயத்தை உங்கள் பக்கத்தில் பதிய வேண்டும். #நூறுநாள்மகிழ்ச்சி நாள்:1 இன்று சாலையில் நான் சந்தித்த இந்த பாட்டிக்கு, அவரால் எடுத்து செல்ல கனமாக இருந்த பையை தூக்கி சென்று உதவி செய்ததில் மகிழ்ச்சி. ‪#‎ வாழ்க்கையின்பயன்என்ன‬ இப்படிக்கு, உங்கள் ஹரி

How my Chennai is changing..

Image
Last week I was at a chat and sandwich shop waiting to get some sandwiches for my husband in the evening. I had a thought provoking experience as I waited. Few minutes later, a woman, her daughter (in her thirties) and grandson (should have been about 5 years old) walked closer to the shop. The woman hurriedly asked 'bhaiyya, ek set pani puri dhe dho'. What surprised me was that looking at her, one wouldn't have imagined that she can speak Hindi. She looked simple and like someone from a low-income family. Further observations into their conversations with the chat shop boy showed that they did not understand English but could speak Hindi fluently. This family left the place after getting their pani puri parcelled. The next customer walked in. A typical Tamil father in his forties and his college-going daughter. "Bhaiyya, ek set pani puri dhe dho..kithna ka hai?". Chat boy: "6 piece 20 rupees Sir". Father: "Aur kachori?". Chat boy: "F